Saturday, June 20, 2009

Friday, June 5, 2009

விற்பனைக்கு .... கவர்ச்சி வீடுகள்;

ஹையோ !! எனக்கு அப்படி இருந்திச்சு


Friday, March 20, 2009


உன்னைச் சுற்றிஒளிவட்டம் தோன்றும்
உலகம் அர்த்தப்படும்
ராத்திரியின் நீளம்
விளங்கும்
உனக்கும்
கவிதை வரும்
கையெழுத்து
அழகாகும்
தபால்காரன்
தெய்வமாவான்
உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்
கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்
காதலித்துப் பார்------------------------------
தலையணை நனைப்பாய்மூன்றுமுறை பல்துலக்குவாய்
காத்திருந்தால்நிமிஷங்கள் வருஷமென்பாய்
வந்துவிட்டால்வருஷங்கள் நிமிஷமென்பாய்
காக்கைக்கூட உன்னைகவனிக்காது
ஆனால் - இந்த உலகமேஉன்னையே கவனிப்பதாய்
உணர்வாய்
வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்
உருவமில்லா உருண்டையொன்றுஉருளக் காண்பாய்
இந்த வானம் இந்த அந்திஇந்த பூமி இந்த பூக்கள்
எல்லாம்காதலை கௌரவிக்கும்
ஏற்பாடுகள் என்பாய்
காதலித்துப்பார்--------------------------------
இருதயம் அடிக்கடிஇடம்மாறித் துடிக்கும்
நிசப்த அலைவரிசைகளில்உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்
உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே அம்புவிடும்காதலின் திரைச்சீலையைக்காமம் கிழிக்கும்ஹார்மோன்கள்நைல்நதியாய்ப் பெருக்கெடுக்கும்உதடுகள் மட்டும்சகாராவாகும்தாகங்கள் சமுத்திரமாகும்பிறகுகண்ணீர்த் துளிக்குள்சமுத்திரம் அடங்கும்காதலித்துப்பார்-----------------------------------பூக்களில் மோதி மோதியேஉடைந்து போகஉன்னால் முடியுமா?அகிம்சையின் இம்சையைஅடைந்ததுண்டாஅழுகின்ற சுகம்அறிந்ததுண்டா?உன்னையே உனக்குள்ளேபுதைக்கத் தெரியுமா?சபையில் தனிமையாகவும்தனிமையை சபையாக்கவும்உன்னால் ஒண்ணுமா?அத்வைதம்அடைய வேண்டுமா?ஐந்தங்குல இடைவெளியில்அமிர்தம் இருந்தும்பட்டினி கிடந்து பழகியதுண்டா?காதலித்துப்பார்---------------------------------------சின்னச்சின்னப் பரிசுகளில்சிலிர்க்க முடியுமேஅதற்காகவேனும்புலன்களை வருத்திப்புதுப்பிக்க முடியுமேஅதற்காகவேனும்ஆண் என்ற சொல்லுக்கும்பெண் என்ற சொல்லுக்கும்அகராதியில் ஏறாதஅர்த்தங்கள் விளங்குமேஅதற்காகவேனும்வாழ்ந்துகொண்டேசாகவும் முடியுமேசெத்துக்கொண்டேவாழவும் முடியுமேஅதற்காகவேனும்காதலித்துப்பார்------------------------------------சம்பிரதாயம்சட்டை பிடித்தாலும்உறவுகள்உயிர்பிழிந்தாலும்விழித்துப் பார்க்கையில்உன் தெருக்கள்களவு போயிருந்தாலும்ஒரே ஆணியில் இருவரும்சிக்கனச் சிலுவையில்அறையப்பட்டாலும்நீ நேசிக்கும்அவனோ அவளோஉன்னை நேசிக்க மறந்தாலும்காதலித்துப்பார்சொர்க்கம் - நரகம்இரண்டில் ஒன்றுஇங்கேயே நிச்சயம்காதலித்துப்பார்கவிஞர் - கவிப்பேரரசு வைரமுத்துநூல் - இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல

Wednesday, January 7, 2009

என்னைப் பார்க்கும்போதெல்லாம் நவரசத்திலும் இல்லாத ஒரு பாவனை செய்வாய் அந்த பத்தாவது ரசத்தின் பெயர் என்ன?!! ***********************************
உன் வீட்டைகடக்கும் போதெல்லாம்உன் குடும்பத்தாருடன் தான் இருப்பாய்ஆனாலும் யாரும் அறியாமல் சொல்ல வேண்டியதை சொல்லி விடுகிறாயே கள்ளி! எங்கேயடி கற்றாய் அந்த வித்தையை?! ********************************
"சுற்றுலாவில் நான் ரசித்தவை" என்ற தலைப்பில், கட்டுரை எழுதச் சொன்னார்கள் பக்கம் பக்கமாக எழுதினேன் உன் பெயரை மட்டும்!!!!

பிடித்தது ...!!

பள்ளியை நெருங்கிய சமயத்தில்மீண்டும் தூரல் விழத்தொடங்கஎல்லோரும் அவசரமாய் குடை விரிக்கையில்,நீ மட்டும் குடை பிடிக்கவில்லை,அந்த கணத்திலிருந்து எனக்குக்குடையே பிடிக்கவில்லை!!!

அது ஒரு மழைக்காலம்,மழை நின்ற ஒரு இடைவெளியில்நீ பள்ளி செல்ல ஆயத்தமாய்வீட்டை விட்டு வெளியே வருகிறாய்,உன் வீட்டிற்கும்,சாலைக்கும்இடைப்பட்ட தூரத்தில்தேங்கி நின்ற மழை நீரில்கால் படாமல் இருக்ககற்களை வைத்திருந்தார்கள்,நீ ஒரு கல் விட்டு ஒரு கல்தாண்டிய படியே வருகிறாய்,உன் பாதம் படாத கற்களின்;ஏக்கம் உனக்குத் தெரியுமா?!

காதல் கவிதைகள்

மைதானத்தில் படர்ந்திருந்த நெறிஞ்சி முட்செடியை களைந்து கொண்டிருந்தேன்,ஆசிரியர் அனைவரும்என்னை பாராட்டினர்,நேற்று நீ நெறிஞ்சி முள்ளைக்குத்திக்கொண்டது அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை...!

உணவு இடைவேளையின்போது,அவசரமாய் திறந்த டிபன்பாக்ஸ்காலியாக இருந்ததை கண்டதும்அதெப்படி சரியாக என்னை பார்த்தாய்..?!

கல்யாணத்திற்குப் பிறகும்,நான் தலைப்பெழுத்தைமாற்றிக் கொள்ள மாட்டேனென்றுதோழியிடம் கூறிக்கொண்டேஓரக்கண்ணால் என்னைப் பார்க்கிறாய்;எனக்குதான் தெரியுமே,உன் அப்பாவின் பெயருக்கும்என் பெயருக்கும் முதலெழுத்து ஒன்றுதானென்பது...!

பள்ளியில் மேஜிக் ஷோ நடத்தினார்கள்மேஜிக் நிபுணர் ஏதோ மந்திரம் சொல்லமாயாமாய் மறைந்தது கைக்குட்டை;நீ மந்திரமெல்லாம் சொல்லவில்லைசும்மா ஒருமுறை திரும்பித்தான் பார்த்தாய் ...!

பள்ளிக் காலத்தில்என்னால் நடப்பட்டுஉன்னால் நீரூட்டப்பட்ட அந்த சப்போட்டா கன்றில்காய்க்கும் பழங்கள் மட்டும்அவ்வளவு ருசியாக இருப்பதாகஇன்றைய மாணவர்கள்சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்;இருக்காதா பின்னே காதல் குடித்து வளர்ந்த மரமாயிற்றே...!
யாரும் அறியாமல்பக்கத்து வீட்டு குழந்தையிடம்"லாலிபாப்" வாங்கி சுவைக்கிறாய்,எதிர்பாரா என் வருகையால்சிறிது தடுமாறி,இயல்பாய் முகத்தை வைக்க முயன்றுபிறகு வீட்டை நோக்கி ஓடுகிறாய்வெட்கத்தை முதுகிலும் பரவவிட்டபடி..!

ஊரில் விளையாட்டு போட்டி,ஓட்டப் பந்தயத்தில் முதலாவதாக ஓடிவந்த உனது அண்ணனைநான் முந்தியபோது உன்னையுமறியாமல் துள்ளிக்குத்தித்து மற்றவர்கள் முன் அசடு வழிந்து நின்றாயே நினைவிருக்கிறதா..!

un தங்கை வீட்டில் இல்லாதநேரமாய் பார்த்து,அவளைப் பார்ப்பதற்கு வந்ததாகஅம்மாவிடம் சொல்லிக்கொண்டேஎன்னை பார்த்து குறும்பாய் சிரிக்கிறஉன்னை என்ன செய்யலாம்....!